<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1453089987834425165</id><updated>2011-04-21T14:52:09.450-07:00</updated><category term='ரயில்'/><category term='train journey'/><category term='சிரிப்பு'/><category term='grandma'/><category term='பாட்டி'/><category term='humor'/><title type='text'>நகைச்சுவை - அரசர்.</title><subtitle type='html'>சொந்தக் கதை.. சுகமான கதை..!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rahum.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1453089987834425165/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rahum.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நகைச்சுவை-அரசர்</name><uri>http://www.blogger.com/profile/10642962799072401405</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp1.blogger.com/_D-u1xjaCh98/SGjnnFsjJII/AAAAAAAAADw/0YNVSoav2Fk/S220/images.jpg...JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1453089987834425165.post-7553292999865087496</id><published>2008-07-06T08:39:00.000-07:00</published><updated>2008-07-06T08:43:57.973-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரயில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='grandma'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='train journey'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='humor'/><title type='text'>பாட்டி அடித்த லூட்டி..!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: aAvarangal; line-height: 18px; -webkit-border-horizontal-spacing: 1px; -webkit-border-vertical-spacing: 1px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(255, 102, 0);"&gt;வணக்கம் நண்பர்களே..!&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்வண்டியில் என் பாட்டி செய்த லூட்டியைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;பட்டம்மாள்.. வயது 86. தன் மகனுடன் சென்னையில் நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள். என் தாயின் தாய். தன்னுடைய 38-வது வயதிலேயே கிடைத்த பேரன் என்பதால் என் மீது பாசம் இருந்தாலும், பிறந்ததுமே தன் மகளை விழுங்கிவிட்டானே என்ற ஆதங்கமும் அவருக்கு இன்றும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பது துக்ளக்,ஜூனியர் விகடன், நக்கீரன். பாடுவது கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள். போடுவது புள்ளிக் கோலம், பேரன் பேத்திகளுக்கு போஸ்டர் எழுத்துகளில் கடிதம். [ஏண்டா மடப் பயலே ராஜா என்று எழுதுவதற்கு பதிலாக ஏண்டா மடை பாயலே என்று ஒருமுறை எழுதிவிட நான் குசும்பாக வாய்க்கால் தூர் வார வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பதில் எழுதி பாட்டியிடம் பாட்டு வாங்கியது ஒரு இனிய கதை..] பார்ப்பது சன் சீரியல்கள் என்று ஒரு கலவையான பெண்மணி. படித்தது அந்தக் கால முதல் பாரம் என்றாலும் உலக விஷயங்கள் அனைத்தும் விரல் நுனியில்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை அவரது மகன் சி.எம்.சி. மும்பையில் பணிபுரிந்து வந்தார். அப்போது நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்துக்கு அவர் வர இயலாததால், தன் தாயை கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து, பின் சென்னையில் இருந்து குடந்தை வர முன்பதிவு செய்து தொடர்வண்டியில் இவரை அனுப்பி வைத்தார். மும்பை - சென்னை தொடர் வண்டி 4 மணி நேரம் தாமதமாகிவிட, சென்னையில் இருந்து கிளம்பும் வண்டியைப் பிடிக்க இயலவில்லை. என்றாலும் பாட்டி அயரவில்லை. எழும்பூரில் புறப்படத் தயாராக இருந்த வேறொரு வண்டியில் தான் செல்லவிருந்த பெட்டி, இருக்கை எண் பிசகாது ஏறி செட்டில் ஆகி விட்டார். வண்டி மட்டும் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே அந்த இருக்கைக்குரிய நபர் வந்து கேட்ட போது பாட்டி எழ மறுத்து விட்டார். அவருக்கும் பாட்டிக்கும் இடையே நடந்ததாக நம்பப்படும் உரையாடல் இது..[ ஒவ்வொரு முறை இந்தக் கதையை நாங்கள் பாட்டியைச் சொல்லச் சொல்லி கேட்கும் போது சம்பவங்கள் ஒரே மாதிரியும் பேச்சு வார்த்தைகள் வெவ்வேறாகவும் இருக்கும்..!]&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிம்மா.. எந்திரிங்க.. இது என் சீட்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்.. இது என்னோடது..&lt;br /&gt;&lt;br /&gt;இல்லம்மா.. எங்க உங்க சீட்டைக் காட்டுங்க.. நீங்க உக்காரவேண்டிய சீட்டு எதுன்னு நான் காட்டறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;உன் சீட்டே உனக்கு தெரியலே.. இதில எனக்கு சீட்டு காட்டுவியா.. இதுதான் என்னோடது..&lt;br /&gt;&lt;br /&gt;உங்க டிக்கட்டைக் காட்டுங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;நீ என்ன ரயில் ஆபீசரா..? முடியாது.. [ உண்மையில் டிக்கட்டை பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார் என்ற பயமாம் பாட்டிக்கு..]&lt;br /&gt;&lt;br /&gt;கிழவிகளுக்கு ஒரு வசதி என்னவென்றால் யாரும் அவர்களை பிடித்து இழுக்கவோ, திட்டவோ அஞ்சுவார்கள்.. நம் நண்பரும் வேறு வழியின்றி பயணச் சீட்டு பரிசோதகரைத் தேடிப் போக.. பாட்டி படுக்கையைப் போட்டு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்து விட்டது. வண்டியும் புறப்பட்டு விட்டது. சற்றுப் பொறுத்து அதிகாரி வந்து எழுப்பி டிக்கெட் கேட்க, தன் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தது பா[ர்]ட்டி. முதலில் அதிகாரி சரியாக இருக்கிறதே என்று குழம்பினாலும், ஒவ்வொன்றாக சரிபார்த்து வரும்போது, வண்டி மாறியிருப்பது தெரிந்தது. பின்னர்...&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிம்மா.. எந்திரிங்க சொல்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க.. எனக்கு உடம்பு சரியில்ல..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் போர்வையை எடுத்துட்டு என்னப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுறது கேக்குது.. சொல்லுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க போகவேண்டியது இந்த ரயில் இல்லம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;[சற்றே முகத்தைத் திறந்து, அதிகாரி பக்கம் திரும்பி..] இது கும்மோணம் போற வண்டி இல்லியா..?&lt;br /&gt;&lt;br /&gt;போகுது.. ஆனா..&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன என்ன.. ? எனக்கு உடம்பு சரியில்ல..[ திரும்பி படுத்து விட்டார்].&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மா இது வம்பாப் போயிருச்சு..? இங்கே பாரும்மா.. உன் வண்டி முன்னாடியே போயிருச்சு.. நீ முன்னாடியே வந்திருக்கணும்.. அதை கோட்டை விட்டுட்டு இம்சை பண்றே.. எந்திரி..&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படிப் போவும்..? பம்பாயில் இருந்து செண்ட்ரல்ல எறங்கி டாச்சி புடிச்சு இங்க வந்து ஏறியிருக்கேன்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல..&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரி மீண்டும் முட்டுச்சந்துக்கு வந்து விட்டார். பின்னர் திரும்ப பாட்டியின் சீட்டுகளை சோதித்து ஒருவாறு மும்பை வண்டி தாமதமென அறிந்து..&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிம்மா.. நீங்க பாம்பேலேருந்து வந்த வண்டி லேட்டு.. அதனால இங்க இருந்த வண்டி கிளம்பிருச்சு.. இது இவர் இருக்க வேண்டிய சீட்டு.. நீங்க எந்திரிங்க.. உங்களுக்கு வேற சீட்டு தாரேன் வாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அத அந்தப் புள்ளைக்கு குடுங்க.. லேட்டாமில்ல.. நாங்க தாதருக்கு சரியான நேரத்துக்கு வந்துதான் ஏறினோம்..&lt;br /&gt;&lt;br /&gt;இனி சாமம் வேலைக்காகாது.. தண்டம் தான் என்று முடிவுக்கு வந்த அதிகாரி...&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.. கெழவி.. என்ன லா பாய்ண்ட் பேசறே.. எந்திரிக்கிறியா..? இல்லே தூக்கி வெளில போடவா..?&lt;br /&gt;&lt;br /&gt;யாரைப் பார்த்து கெழவிங்கறே..? நீ அப்படியே கொமரனாவே இருக்கப் போறியா..? நான் ஒரு இஞ்சினீரு அம்மா.. அப்பை சப்பையா நெனைச்சுடாதே..?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரி துணுக்குற்றாலும் சமாளித்து..&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி நீரா இருந்தா என்ன.. சுக்கு நீரா இருந்தா என்ன.. சரி.. எந்தக் கம்பேனியில வேல செய்யுறாரு உம் மொவன்..?&lt;br /&gt;&lt;br /&gt;சியெம்சி.. கேள்விப் பட்டுருக்கியா..?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரிக்கு பலமான அதிர்ச்சி.. இந்தக் காலத்தில் கணினிகளும் நிறுவனங்களும் சர்வ சாதாரணம்.. 25 வருடங்களுக்கு முன் அவ்வாறல்ல.. அதிலும் ஐ.பி.எம் ஆக இருந்து, ஆளுவோரால் கோக் இத்யாதியுடன் விரட்டியடிக்கப்பட்டு பின் இந்திய அரசு ஆதரவுடன் கம்ப்யூட்டர் மெயிண்டனன்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் துவக்கப்பட்ட அந்தக் கால இலுப்பைப் பூ அது. மேலும் கம்ப்யூட்டர் என்றால் ரோபோ என்று ரொம்ப பேர் நினைத்திருந்த&lt;br /&gt;அந்தக் காலத்தில், சியெம்சி என்று சர்வ அலட்சியமாக ஒரு கிழவி சொன்னால்.. அதிர்ச்சி இல்லாமல் இருக்குமா..?&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் அதிகாரிக்கு ஒரு சந்தேகம்.. எவ்வளவு விவரமாகப் பேசினாலும் பேச்சு வழக்கு ஒருவரின் தகுதியைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறோம் அல்லவா..? அது போல கடைசி முயற்சியாக...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தாம்மா .. எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும்.. இப்ப எந்திரிக்கிறியா.. இல்லே போலீசைக் கூப்பிடவா..?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி விருட்டென்று எழுந்தது.. பாட்டிலைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தது. அதிகாரி மற்ற பயணிகள் மத்தியில் தன் இமேஜ் உயரப் போவதை எண்ணி மகிழ்ந்திருக்க, பாட்டி சம்மட்டி அடி கொடுத்தது..&lt;br /&gt;&lt;br /&gt;நீ போலீசைதான் கூப்பிடுவே.. எம் மவன் யாரு தெரியுமா..? மாதவ ராவ் சிந்தியாவோட பிரெண்டு. ரெண்டு பேரும் பந்து விளையாடுற படம் வச்சிருக்கேன் காட்டவா..?&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அந்த 'அசல்' பயணிக்கு வேறு இடம் ஒதுக்கப் பட்டது. மயிலாடுதுறை வந்ததும் அதிகாரி பாட்டியை எழுப்பி..&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிம்மா.. இந்த சீட்டை வச்சிக்கங்க.. இங்கெருந்து கும்மோணத்துக்கு போட்டிருக்கேன்.. இங்கே நான் எறங்கிடுவேன்.. வேற அதிகாரி வருவாரு.. சீட்டு கேட்டா இதைக் காட்டுங்க.. இல்லேண்ணா என் வேலை போயிடும்..&lt;br /&gt;&lt;br /&gt;என்று தன் செலவில் எடுக்கப்பட்ட ஒரு டிக்கட்டைக் கொடுத்துவிட்டு இறங்கிப் போனாராம்..!&lt;br /&gt;__________________&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1453089987834425165-7553292999865087496?l=rahum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rahum.blogspot.com/feeds/7553292999865087496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1453089987834425165&amp;postID=7553292999865087496' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1453089987834425165/posts/default/7553292999865087496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1453089987834425165/posts/default/7553292999865087496'/><link rel='alternate' type='text/html' href='http://rahum.blogspot.com/2008/07/blog-post.html' title='பாட்டி அடித்த லூட்டி..!'/><author><name>நகைச்சுவை-அரசர்</name><uri>http://www.blogger.com/profile/10642962799072401405</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://bp1.blogger.com/_D-u1xjaCh98/SGjnnFsjJII/AAAAAAAAADw/0YNVSoav2Fk/S220/images.jpg...JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
